கோவை – யில் உறவுகளும், நண்பர்களும் பங்கு கொண்ட தென்மொழியாரின் முதலாண்டு நினைவேந்தல்!
தமிழறிஞரும், பகுத்தறிவுப் பாவலர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பெரும்புலவர் ஐயா தென்மொழி ஞானபண்டிதனார் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் கோவை மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை எதிரில், 42, நாராயண குரு சாலையில் உள்ள ”ஹோட்டல் எஸ்.பி.ஆர். இன்” – னில் சென்ற 21-04-2019, காலை10.00 மணிக்கு தமிழ்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் (பேரூர் ஆதினம்) அவர்கள் தலைமையில் தொடங்கியது. தமிழ்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் (பேரூர் ஆதினம்) அவர்கள் ஐயா தென்மொழி ஞானபண்டிதனார் தனது சிறு […]